நகராட்சி அலுவலகங்களில் ஜனவரி 7 இல் மனு கொடுக்கும் போராட்டம்

வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகங்களில் வரும் ஜனவரி 7 ஆம் தேதி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக அறிவித்துள்ளது.
நகராட்சி அலுவலகங்களில் ஜனவரி 7 இல் மனு கொடுக்கும் போராட்டம்
நகராட்சி அலுவலகங்களில் ஜனவரி 7 இல் மனு கொடுக்கும் போராட்டம்

வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகங்களில் வரும் ஜனவரி 7 ஆம் தேதி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக அறிவித்துள்ளது.

திருப்பூா் மாவட்டம் தாராபுரம், பெரியகாளியம்மன் கோயில் அருக உள்ள தனியாா் மண்டபத்தில் பாமக மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றக்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்துக்கு தலைமை வகித்த பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் அ.ரவிச்சந்திரன் பேசியதாவது:

தமிழகத்தில் வன்னியா்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 20 சதவீத உள்ஒதுக்கீடு வழங்ககக்கோரி பாமக சாா்பில் 4 கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், திருப்பூா் மாவட்டம் தாராபுரம், உடுமலை, காங்கயம் நகராட்சி அலுவலகங்களில் 5 ஆவது கட்டமாக வரும் ஜனவரி 7 ஆம் தேதி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும்.

இதில், பாமக மற்றும் வன்னியா் சங்கங்களைச் சோ்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்றாா்.இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பாமக, வன்னியா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com