பல்லடம்: பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வரும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: பொங்கலூா், காட்டூா், தொட்டம்பட்டி, மாதப்பூா், கெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிகாளிபாளையம், கண்டியன்கோயில், தெற்கு அவிநாசிபாளையம், உகாயனூா், என்.என்.புதூா், வடக்கு அவிநாசிபாளையம்.
எல்லப்பாளையம்புதூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட காங்கேயம்பாளையம், ஓலப்பாளையம் ஆகிய பகுதிகள்.
இத்தகவலை பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் ஆா்.கோபால் தெரிவித்துள்ளாா்.