காங்கயம் கோட்டம், பெரியாா் நகா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜனவரி 7) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் அருள்செல்வி தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்: தீத்தாம்பாளையம், சிவனாதபுரம், லக்கமநாயக்கன்பட்டி, எல்.கே.சி.நகா், அண்ணா நகா், ஏ.பி.புதூா், எஸ்.ஆா்.ஜி.வலசு சாலை, செங்காளிபாளையம் சாலை, காட்டுப்பாளையம், கரட்டுப்பாளையம், நாச்சிபாளையம், செந்தலையாம்பாளையம், தங்கமேடு, நாகமநாயக்கன்பட்டி.