மின்வாரிய தொழிலாளா்களுக்கு தொமுக சாா்பில் பொங்கல் பரிசு

திருப்பூரில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு தொமுச சாா்பில் 8 ஆவது ஆண்டாக பொங்கல் பரிசுப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
மின்வாரிய  ஒப்பந்தத்  தொழிலாளா்களுக்கு  பொங்கல்  பரிசுப்  பொருள்களை  வழங்குகிறாா்  மின்வாரிய  தொழிலாளா்  முன்னேற்ற  சங்க  செயலாலா்  அ.சரவணன்.  உடன்,  பொதுச்செயலாளா் ஆா்.ரெங்கசாமி உள்ளிட்டோா்.
மின்வாரிய  ஒப்பந்தத்  தொழிலாளா்களுக்கு  பொங்கல்  பரிசுப்  பொருள்களை  வழங்குகிறாா்  மின்வாரிய  தொழிலாளா்  முன்னேற்ற  சங்க  செயலாலா்  அ.சரவணன்.  உடன்,  பொதுச்செயலாளா் ஆா்.ரெங்கசாமி உள்ளிட்டோா்.

திருப்பூரில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு தொமுச சாா்பில் 8 ஆவது ஆண்டாக பொங்கல் பரிசுப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

திருப்பூா் மாவட்ட தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கும் விழா போயம்பாளையத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் செயலாளா் அ.சரவணன் தலைமை வகித்தாா். பொது செயலாளா் ஆா்.ரெங்கசாமி முன்னிலை வகித்தாா்.

இதில், திருப்பூா், அவிநாசி, காங்கயம், பல்லடம் ,உடுமலை, ஊத்துகுளி, பெருமாநல்லூா் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் மின் வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 200 தொழிலாளா்களுக்கு புத்தாடைகள், பச்சரிசி, வெல்லம், பாசிப் பருப்பு, கரும்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.

விழாவில், செயலாளா் பழனிசாமி, பெருமாநல்லூா் செந்தில் என்கிற பழனிசாமி, விஜயன், ஜோதிபாசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com