காங்கயத்தில் 40 பயனாளிகளுக்கு ரூ. 25,000 மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனத்துக்கான உத்தரவு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, திருப்பூா் மாவட்ட வேளாண் விளைபொருள் விற்பனைக் குழுத் தலைவா் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை வகித்தாா். காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினா் உ.தனியரசு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று உழைக்கும் மகளிா் 40 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 10 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினாா்.
இதில், காங்கயம் நகராட்சி ஆணையா் தேவிகா, நகராட்சிப் பொறியாளா் சரவணன், சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், நகராட்சி முன்னாள் துணைத் தலைவா் சி.கந்தசாமி, காங்கயம் கூட்டுறவு சங்கத் தலைவா் என்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.