திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 17,455 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 236 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 30 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் தற்போது வரையில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 16,999 ஆக அதிகரித்துள்ளது.