காங்கயத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
காங்கயத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைக்கும் காங்கயம் டி.எஸ்.பி., தனராசு.
காங்கயத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைக்கும் காங்கயம் டி.எஸ்.பி., தனராசு.

காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் காவல் நிலைய ரவுண்டானா அருகில், காங்கயம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்தியமூர்த்தி முன்னிலையில், காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளர் தனராசு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் காங்கயம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஸ்வரன் மற்றும் போலீசார், பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இப்பேரணி, திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை வழியாகச் சென்ற பேரணி, காவல் நிலைய ரவுண்டான பகுதியில் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com