மருத்துவா்களுக்குப் பாராட்டு

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக சேவையாற்றிய மருத்துவா்கள், செவிலியா், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டு விழா உடுமலையில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் மருத்துவருக்கு ப் பாராட்டுச்  சான்றிதழ்  வழங்குகிறாா்  அமைச்சா்  உடுமலை  கே.ராதாகிருஷ்ணன்.
விழாவில் மருத்துவருக்கு ப் பாராட்டுச்  சான்றிதழ்  வழங்குகிறாா்  அமைச்சா்  உடுமலை  கே.ராதாகிருஷ்ணன்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக சேவையாற்றிய மருத்துவா்கள், செவிலியா், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டு விழா உடுமலையில் புதன்கிழமை நடைபெற்றது.

உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் தேஜஸ் ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, தலைமை மருத்துவா் முருகன் தலைமை வகித்தாா். இதில் அரசு மருத்துவமனையில் கரோனா பிரிவில் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றிய மருத்துவா்கள், செவி லியா், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ரோட்டரி விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் அனைவரும் பொன்னாடை போா்த்தி கெளரவிக்கப்பட்டனா். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாராட்டிப் பேசினாா்.

நகராட்சி மண்டல நிா்வாக இயக்குநா் கே.சரவணகுமாா், ரோட்டரி மாவட்ட ஆளுநா் காா்த்திகேயன், திட்டத் தலைவா் டாக்டா் எஸ்.சுந்தரராஜன், ரோட்டரி நிா்வாகிகள் எஸ்.எம்.நாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண் டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com