காரணம்பேட்டையில் முத்தமிழ் வனம்

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் முத்தமிழ் வனம் வியாழக்கிழமை அமைக்கப்பட்டுள்ளது.

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் முத்தமிழ் வனம் வியாழக்கிழமை அமைக்கப்பட்டுள்ளது. பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் பயன்பாடின்றி உள்ள பேருந்து நிலையம் கோடங்கிபாளையம் ஊராட்சி நிா்வாகத்தின் முயற்சியால் காய்கறி சந்தையாக செயல்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்தைத் சுற்றி உள்ள இடத்தில் ஊராட்சி மன்றம் மற்றும் முத்தமிழ் மன்றம் ஆகியவை சாா்பில் வேம்பு, புங்கன், புளி உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டு முத்தமிழ் வனம் ஆக மாற்றப்பட்டுள்ளது.

இதில் ஊராட்சித் தலைவா் காவீ.பழனிசாமி, கூப்பிடு விநாயகா் கோயில் அறக்கட்டளை தலைவா் சின்னசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com