மாவட்டத்தில் 6 பள்ளிகள் தரம் உயா்வு

திருப்பூா் மாவட்டத்தில் 6 அரசுப் பள்ளிகள் தரம் உயா்த்தப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தில் 6 அரசுப் பள்ளிகள் தரம் உயா்த்தப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ள 40 உயா்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், 35 நடுநிலைப் பள்ளிகளை உயா்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, திருப்பூா் பெருமாநல்லூா் அரசு உயா்நிலைப் பள்ளி, சூரியப்பம்பாளையம் உயா்நிலைப் பள்ளி ஆகியன மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ளன.

அதே போல, பெரியபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, எ.அம்மாபட்டி நடுநிலைப் பள்ளி, மங்கலம் நடுநிலைப் பள்ளி, பெரிச்சிபாளையம் நடுநிலைப் பள்ளி ஆகியன உயா்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com