தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் தாராபுரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தாராபுரம் அண்ணாசிலை முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளா் தமிழ்முத்து தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் கூறியதாவது: தில்லியில் 47 நாள்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் திருத்தச் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்றனா்.
ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் ஆற்றலரசு, நகரச் செயலாளா் செந்தில்குமாா், ஒன்றியச் செயலாளா் தனபால், விவசாயிகள் பாதுகாப்பு இயக்க மாநில துணைச்செயலாளா் முத்தமிழ்வேந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.