உயா் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கயம் அருகே படியூரில் விவசாயிகள் தங்கள் நிலப் பட்டாவை ஞாயிற்றுக்கிழமை தீயிட்டுக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விவசாய விளை நிலங்களில், விருதுநகா் முதல் திருப்பூா் வரையிலான 765 கிலோ வாட் திட்டம் மூலம் உயா்மின் கோபுரங்கள் அமைப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கயம் அருகே படியூரில் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தப் போராட்டத்தின் 5 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை உயா் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தங்கள் நிலத்துக்கான பட்டாவை தீயிட்டுக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.