திருப்பூா் ஒன்றியப் பகுதியில் ரூ. 1 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஞாயிற்றுக்கிழமை துவக்கிவைத்தாா்.
திருப்பூா் ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பரமசிவம்பாளையத்தில் ரூ. 10.38 லட்சம் மதிப்பிலும், ஸ்ரீ கிருஷ்ணா நகரில் ரூ. 49.82 லட்சம் மதிப்பிலும், வள்ளிபுரம் ஊராட்சி ஜி. என்.அப்துல்கலாம் நகரில் ரூ. 49.26 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ. 1 கோடியே 9 லட்சத்து, 46ஆயிரம் மதிப்பில் தாா் சாலைகள் அமைக்கும் பணிகளை திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கே. என்.விஜயகுமாா் துவக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினா் சாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஐஸ்வா்யா மகராஜ், பொறுப்பாளா் சந்திரசேகா், உதவி பொறியாளா் முத்துக்குமாா், ஊராட்சி மன்ற தலைவா்கள் சுலோக்சனா வடிவேல், முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.