ராகுல்காந்திக்கு திருக்குறள் புத்தகத்தை நினைவுப் பரிசாக வழங்கிய திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் ப.கோபி திங்கள்கிழமை திருக்குறள் புத்தகத்தை வழங்கி, நன்றி தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தங்கியிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து, காங்கயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலை
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தங்கியிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து, காங்கயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலை

காங்கயம்: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் ப.கோபி திங்கள்கிழமை திருக்குறள் புத்தகத்தை வழங்கி, நன்றி தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் மாவட்டதுக்கு உள்பட்ட காங்கயம், தாராபுரத்தில் நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிலையில், காங்கயத்திற்கு வருகை தந்து உரையாற்றிய ராகுல்காந்திக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தாராபுரத்தில் தங்கியிருந்த ராகுல்காந்தியை திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ப.கோபி திங்கள்கிழமை காலை சந்தித்து, திருக்குறள் புத்தகத்தை வழங்கி, நன்றி தெரிவித்தார்.

இந்த சந்திப்பு குறித்து ப.கோபி கூறியபோது, காங்கயம் கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து நன்றி தெரிவித்தேன். அதற்கு அவர், நிகழ்ச்சி சிறப்பாக இருந்ததாகவும், காங்கயம் தொகுதி மக்களை சந்தித்து அவர்களின் அன்பான வரவேற்பை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சியளித்தது எனவும் ராகுல்காந்தி என்னிடம் தெரிவித்தார். மேலும், கொங்கு மண்டலத்தின் பெருமைமிகு அடையாளச் சின்னமாகத் திகழும் காங்கேயம் காளையை பார்வையிட்டது மகிழ்ச்சிகரமான தருணம் என்றும் ராகுல்காந்தி தெரிவித்ததாக அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com