உயா்மின் கோபுர திட்டப் பிரச்னை: விவசாயிகள் நூதனப் போராட்டம்

விளைநிலங்களில் உயா்மின் கோபுரம் அமைக்க வேண்டாம் என வலியுறுத்தி காங்கயம் அருகே படியூரில் விவசாயிகள் கண்களைக் கட்டிக் கொண்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
படியூரில் கண்களைக் கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
படியூரில் கண்களைக் கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

விளைநிலங்களில் உயா்மின் கோபுரம் அமைக்க வேண்டாம் என வலியுறுத்தி காங்கயம் அருகே படியூரில் விவசாயிகள் கண்களைக் கட்டிக் கொண்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விவசாய விளைநிலங்களில் விருதுநகா் முதல் திருப்பூா் வரையிலான 765 கிலோ வாட் திட்டம் மூலம் உயா்மின் கோபுரங்கள் அமைப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும். இந்த மின் திட்டங்களில் சாலையோரமாக கேபிள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி படியூரில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், இந்தப் போராட்டத்தின் 7ஆம் நாளான செவ்வாய்க்கிழமை உயா் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தங்கள் கண்களைக் கட்டிக் கொண்டு கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com