காங்கயம்: காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் 72 ஆவது குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சி அலுவலக வளாகத்தில், நகராட்சி ஆணையர் பா.தேவிகா தேசியக் கொடியேற்றி வைத்து, கொடி வணக்கம் செலுத்தினார்.
இதில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எம்.செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் செல்வக்குமார், நகரமைப்பு ஆய்வாளர் மார்ட்டின் மற்றும் அலுவலக ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.