காங்கயம் நகராட்சியில் குடியரசு தின விழா

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் 72 ஆவது குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றி வைத்து, உறுதிமொழி எடுக்கும் நகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்கள்.
காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றி வைத்து, உறுதிமொழி எடுக்கும் நகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்கள்.

காங்கயம்: காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் 72 ஆவது குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சி அலுவலக வளாகத்தில், நகராட்சி ஆணையர் பா.தேவிகா தேசியக் கொடியேற்றி வைத்து, கொடி வணக்கம் செலுத்தினார்.

இதில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எம்.செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் செல்வக்குமார், நகரமைப்பு ஆய்வாளர் மார்ட்டின் மற்றும் அலுவலக ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com