காங்கயம்: காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 72 ஆவது குடியரசு தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சி அலுவலக வளாகத்தில் மண்டல துணை வட்டாட்சியர் செல்வி.மணிமேகலை தேசியக் கொடியேற்றி வைத்து, கொடி வணக்கம் செலுத்தினார்.
இதில், காங்கயம் வருவாய் ஆய்வாளர் கனகராஜ், நத்தக்காடையூர் வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.