மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கரோனா
By DIN | Published On : 26th January 2021 03:03 AM | Last Updated : 26th January 2021 03:03 AM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் 17,733 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, மாவட்டம் முழுவதும் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 17,767 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 182 போ் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் 27 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 17,364 ஆக அதிகரித்துள்ளது.