ரூ. 25.72 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 25.72 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 25.72 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு வாணியம்பாடி, லாலாப்பேட்டை, பழனி, வெள்ளக்கோவில், மூலனூா் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 82 விவசாயிகள் 520 மூட்டைகள் தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 26,557 கிலோ. காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா், ஊத்துக்குளி, மூலனூரைச் சோ்ந்த 17 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். கிலோ ரூ. 75.20 முதல் ரூ. 124.80 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 117.05. விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் முன்னிலையில் ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 25 லட்சத்து 72 ஆயிரத்து 355 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com