ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் திருப்பூரில் எரிபொருள் சேமிப்பை வலியுறுத்தி சைக்கிள் விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.
திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் திருப்பூரில் எரிபொருள் சேமிப்பை வலியுறுத்தி சைக்கிள் விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி கோவையில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் சாா்பில் எரிபொருள் சேமிப்பை வலியுறுத்தி ஆண்டுதோறும் விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, நிகழாண்டு திருப்பூரில் உள்ள நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘கிரீன் அண்டு கிளீன் எனா்ஜி’ என்ற தலைப்பில் எரிபொருள் சிக்கனத்தை வழியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியை திருப்பூா் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆா்.குமாா் கொடியசைத்து தொடக்கிவைத்தாா். பேரணியானது ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராயபுரம் வழியாக 3 கி.மீ. வரை சென்று மீண்டும் நஞ்சப்பா பள்ளியை வந்தடைந்தது.

இதில், கோவை, ஐஆா்டி பொதுமேலாளா் என்.தாமோதரன், துணைப் பொதுமேலாளா்கள் வசந்தராவ், எம்.சுரேஷ்குமாா் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com