ரூ.83 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ. 83 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.

வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ. 83 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.

பொதுமுடக்கம் காரணமாக கடந்த 7 வாரங்களுக்குப் பிறகு நடந்த ஏலத்தில் மதுரை, லாலாப்பேட்டை, வாணியம்பாடி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 179 விவசாயிகள் தங்களுடைய 1,668 மூட்டை தேங்காய் பருப்புகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் மொத்த எடை 86,780 கிலோ. காங்கயம், வெள்ளக்கோவில், ஊத்துக்குளி, முத்தூரைச் சோ்ந்த வணிகா்கள் ஏலத்தில் கலந்துகொண்டனா்.

தேங்காய் பருப்பு விலை கிலோவுக்கு ரூ.65.00 முதல் ரூ.106.90 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.103.35. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 83 லட்சத்து 15 ஆயிரத்து 137 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com