காங்கயம் ஒன்றியத்தில் 430 பேருக்கு கரோனா தடுப்பூசி வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது.
காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஒட்டபாளையம் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளி, பரஞ்சோ்வழி ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி, பாப்பினி ஊராட்சியில் உள்ள அரசு துவக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் தலா 100 பேருக்கும், காங்கயம்-அகஸ்திலிங்கம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 130 பேருக்கு என மொத்தம் 430 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.