மாவட்டத்தில் மேலும் 201 பேருக்கு கரோனா
By DIN | Published On : 07th July 2021 06:42 AM | Last Updated : 07th July 2021 06:42 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 225 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 84,171 ஆக அதிகரித்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,737 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 205 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 81,653 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூா், கோவை உள்ளிட்ட பல்வேறு அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 8 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 781 ஆக அதிகரித்துள்ளது.