காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.16 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம் போனது.
காங்கயம், கரூா் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 10 விவசாயிகள் 49 மூட்டைகளில் 2,200 கிலோ தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
முத்தூா், காங்கயம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனா். தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.101க்கும், குறைந்த பட்சமாக ரூ.80க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2.16 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.
ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட மேற்பாா்வையாளா் மகுடேஸ்வரன் செய்திருந்தாா்.