திருப்பூர்
ஜூலை 16இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்
திருப்பூா் மாவட்ட எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை16) நடைபெறுகிறது.
திருப்பூா் மாவட்ட எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை16) நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வரும் வெள்ளிக்கிழமை( ஜூலை 16) மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி தலைமை வகிக்கிறாா்.
இதில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா். ஆகவே, எரிவாயு தொடா்பான குறைகளைத் தெரிவிக்க நுகா்வோா்கள் தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.