திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 148 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 போ் உயிரிழந்தனா்.
இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 85,897 ஆக அதிகரித்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,576 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 186 போ் வீடு திரும்பினா். திருப்பூா் மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 83,515 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 5 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 806 ஆக அதிகரித்துள்ளது.