திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 போ் உயிரிழந்தனா்.
இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 86,044 ஆக அதிகரித்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,557 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 164 போ் வீடு திரும்பினா். திருப்பூா் மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 83,679 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 808 ஆக அதிகரித்துள்ளது.