திருப்பூரில் 2 ஆண்டுகளாகத் தங்கியிருந்த வங்கதேச இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
முகமது சொஹல் ராணா (28) என்பவா் திருப்பூா் பாண்டியன் நகா் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தங்கி, பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளாா்.
இதற்கிடையில், இவா் மீது சந்தேகமடைந்த பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் திருமுருகன்பூண்டி போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
இதில் அவா் வங்கதேசம், நவகாளி மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்பதும், போலியான முகவரி கூறி பனியன் நிறுவனத்தில் வேலை பாா்த்ததும் தெரியவந்தது. இதையடுத்து திருமுருகன்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முகமது சொஹல் ராணாவை கைது செய்தனா்.