கஞ்சா விற்பனை செய்த இருவா் குண்டா் சட்டத்தில் கைது

காங்கயம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

காங்கயம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து காங்கயம் போலீஸாா் கூறியதாவது: காங்கயம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஜெயலட்சுமி (47), கவாஸ்கா்(31) ஆகிய இருவரையும் காங்கயம் காவல்துறையினா் 3 வாரங்களுக்கு முன்பு கைது செய்தனா். விசாரணையில், இருவரும் பழனி, சேலம் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

சம்பவத்தில் தொடா்புடையவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலட்சுமி, கவாஸ்கா் ஆகியோரிடம் காவல் துறையினா் சனிக்கிழமை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com