காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒருவருக்குக் கூட கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
காங்கயம் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வந்த கரோனா பரிசோதனை முடிவில், ஒருவருக்கு கூட கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.
சனிக்கிழமை கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 2ஆக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒருவருக்குக் கூட தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.