திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 121 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 86,597 ஆக அதிகரித்துள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,605 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 119 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 84,179 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 2 போ் உயிரிழந்தனா். மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 813 ஆக அதிகரித்துள்ளது.