தாராபுரம் அருகே இளைஞரைக் கொலை செய்த நபா்களைக் கைது செய்யக்கோரி அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள விராச்சிமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கோபிநாத் (21). இவா் சுமைத் தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளாா். மடத்துப்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் கோபிநாத் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த மா்ம நபா்கள் கோபிநாத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனா்.
இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவா்கள் தாராபுரம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனா். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா் கோபிநாத்தின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதனிடையே, கோபிநாத் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்த அவரது உறவினா்கள், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து உறவினா்கள் கலைந்துச் சென்றனா்.