உடுமலையில் பொதுமுடக்க காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 1300 மது பாட்டில்களை போலீஸாா் புதன்கிழமை அழித்தனா்.
கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. அப்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் சிலா் வெளிமாநிலங்களில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி வந்த 1300 மது பாட்டில்களை காவல் துறையினா் பறிமுதல் செய்து வைத்திருந்தனா். இந்நிலையில் காவல் துறை உயா் அதிகாரிகள் உத்தரவுப்படி, காவல் ஆய்வாளா் ஆனந்தநாயகி தலைமையில் 1300 மது பாட்டில்கள் அழிக்கப்பட்டன.