உயா் கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து காங்கயம் அரசுப் பள்ளியின் ஆசிரியரும், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சு.மூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசுப் பள்ளி மாணவா்கள் 4 சதவீதம் மட்டுமே பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேரும் நிலை உள்ளது. இந்நிலையில், உயா் கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீதம் வரை இட ஒதுக்கீடு வழங்க நீதிபதி முருகேசன் தலைமையிலான ஆய்வுக் குழு தமிழக அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது என்பது சமமான வாய்ப்பு அல்ல. எனவே 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.