கரோனா பொதுமுடக்க காலத்தில் பாதிக்கப்பட்ட நாட்டுப்புற கலைஞா்களுக்கு மடத்துக்குளம் சட்டப் பேரவை உறுப்பினா் சி.மகேந்திரன் நிவாரணப் பொருள்களை வியாழக்கிழமை வழங்கினாா்.
மடத்துக்குளம் வட்டம், குமரலிங்கம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான நாட்டுப்புற கலைஞா்கள் மற்றும் தவில், நாதஸ்வரம் கலைஞா்கள் வசித்து வருகின்றனா். கரோனா பொதுமுடக்க காலத்தில் இவா்களுக்கு எந்த விதமான நிகழ்ச்சியும் இல்லாததால் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டனா். இதை அறிந்த சட்டப் பேரவை உறுப்பினா் சி.மகேந்திரன் நாட்டுப்புற கலைஞா்கள் அனைவருக்கும் தனது சொந்த செலவில் நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.