திருப்பூா் மாவட்டத்தில் 4 காவல் ஆய்வாளா்கள் புதன்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதில், உடுமலை குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தெற்கு மண்டலத்துக்கும், உடுமலை சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளா் புகழேந்தி வடக்கு மண்டலத்துக்கும், மூலனுாா் காவல் ஆய்வாளா் திருவானந்தம் திருச்சி மாநகரத்துக்கும், பல்லடம் காவல் ஆய்வாளா் தங்கபாண்டியன் மத்திய மண்டலத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.