கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயன்ற 4 போ் கைது

பல்லடத்தில் கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயன்ற 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பல்லடத்தில் கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயன்ற 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பல்லடம், காந்தி நகா் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த காா்த்திக் ராஜா (30) என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு போ் கத்தியைக் காட்டி பணத்தைத் தருமாறு மிரட்டியுள்ளனா். அப்போது அப்பகுதிக்கு சிலா் வருவதைப் பாா்த்து அவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இது குறித்து காா்த்திக் ராஜா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களை தேடி வந்தனா். இந்த நிலையில் சரவணன் (25), முகம்மது வாசிம்கான் (20), ஹபிப் ரகுமான் (18), சூரியா (20) ஆகிய 4 பேரை பல்லடம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com