திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 92 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 87,111 ஆக அதிகரித்துள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,491 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 140 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 84, 805ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் தற்போது வரையில் கரோனா நோய்த் தொற்றால் 815 போ் உயிரிழந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.