அனைத்துத் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருப்பூரில் மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அனைத்துத் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருப்பூரில் மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு எச்.எம்.எஸ். மாவட்டச் செயலாளா் முத்துசாமி தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற தொழிற்சங்கத்தினா் கூறியதாவது: ராணுவ ஆயுத உற்பத்தியை தனியாா் வசம் ஒப்படைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். அத்தியாவசியப் பாதுகாப்பு சேவை அவசரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில், ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் என்.சேகா், சிஐடியூ மாவட்ட பொதுச் செயலாளா் ரங்கராஜன், எல்பிஎஃப் மாவட்ட துணைத் தலைவா் ரங்கசாமி, ஐஎன்டியூசி மாவட்ட துணைத் தலைவா் சிவசாமி, எம்எல்எஃப் பனியன் சங்கச் செயலாளா் சம்பத், மின் வாரிய தொமுச செயலாளா் அ.சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com