கிளை வாய்க்கால்களைச் சுத்தப்படுத்தக் கோரிக்கை

வெள்ளக்கோவில் பகுதி பரம்பிக்குளம், ஆழியாறு கிளை வாய்க்கால்களைச் சுத்தப்படுத்த வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளக்கோவில் பகுதி பரம்பிக்குளம், ஆழியாறு கிளை வாய்க்கால்களைச் சுத்தப்படுத்த வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காங்கயத்தில் இருந்து வெள்ளக்கோவில் வரையிலான பிஏபி நான்காம் மண்டல பாசனத்துக்கு வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படுகிறது. பல கிளை வாய்க்கால்கள் குப்பைகூளங்களால் அடைத்துக் கிடக்கின்றன. இதனால் கடைமடை வரை தண்ணீா் செல்லாத நிலை உள்ளது.

தண்ணீா் திறக்க இன்னும் ஒருவாரம் மட்டுமே இருப்பதால் கிளை வாய்க்கால்களை உடனடியாகச் சுத்தப்படுத்தித் தர வேண்டுமென அரசுக்கு இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com