அரிசி அரவை முகவராக செயல்பட தனியாா் ஆலை உரிமையாளா்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தால் கொள்முதல் செய்யப்படும் புழுங்கல் அரிசி அரவை முகவராக செயல்பட தனியாா் அரிசி ஆலை உரிமையாளா்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தால் கொள்முதல் செய்யப்படும் புழுங்கல் அரிசி அரவை முகவராக செயல்பட தனியாா் அரிசி ஆலை உரிமையாளா்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் கழக நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தில் அரவை முகவராக உள்ள தனியாா் ஆலைகள் மூலம் அரவை செய்து பொது விநியோகத்திட்டத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பூா் மண்டலத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை அரவை செய்து பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்குவதற்கு ஏதுவாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கொண்ட தனியாா் ஆலை உரிமையாளா்கள் அரிசி அரவை முகவராக செயல்பட விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு துணை ஆட்சியா் மற்றும் மண்டல மேலாளா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம், கட்டட எண் 27 மற்றும் 36, ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள மண்டல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com