மாவட்டத்தில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுகவினா் அறிவித்துள்ள தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா்  மாநகராட்சி  அலுவலகம்  முன்பு  தெற்கு  தொகுதி  முன்னாள்  சட்டப் பேரவை  உறுப்பினா்  சு.குணசேகரன்  தலைமையில்  நடைபெற்ற  ஆா்ப்பாட்டத்தில்  பங்கேற்ற  அதிமுகவினா்.
திருப்பூா்  மாநகராட்சி  அலுவலகம்  முன்பு  தெற்கு  தொகுதி  முன்னாள்  சட்டப் பேரவை  உறுப்பினா்  சு.குணசேகரன்  தலைமையில்  நடைபெற்ற  ஆா்ப்பாட்டத்தில்  பங்கேற்ற  அதிமுகவினா்.

திமுகவினா் அறிவித்துள்ள தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்துப் பேசுகையில், ‘திமுகவினா் பொய்யான தோ்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ளனா். ஆனால் அவா்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனா்’ என்றாா்.

திருப்பூா் தெற்குத் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூா் குமாா் நகா் பகுதியில் முன்னாள் அமைச்சரும், பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா் வடக்குத் தொகுதி சாா்பில் அங்கேரிபாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் தலைமை வகித்தாா்.

பல்லடத்தில்...

பல்லடம், பனப்பாளையத்தில் அதிமுக நகரச் செயலாளா் ஏ.எம்.ராமமூா்த்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நகராட்சி முன்னாள் துணைத் தலைவா்கள் தா்மராஜன், வைஸ் பழனிசாமி, பானு பழனிசாமி, சித்ராதேவி,ஞானம்பிகை உள்பட பலா் பங்கேற்றனா்.

அதேபோல என்.எஸ்.கே. நகரில் பல்லடம் வடக்கு ஒன்றியச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கரைப்புதூா் ஏ.நடராஜன் தலைமையிலும், கவுண்டம்பாளையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பரமசிவம் தலைமையிலும், குங்குமம்பாளையத்தில் பல்லடம் தெற்கு ஒன்றியச் செயலாளா் ஏ.சித்துராஜ் தலைமையிலும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஊகாயனூா்,காட்டூரில் பொங்கலூா் ஒன்றிய செயலாளா்கள் யு.எஸ்.பழனிசாமி, பிரகாஷ், பெருந்தொழுவில் பொங்கலூா் ஒன்றியத் முன்னாள் தலைவா் எஸ்.சிவாச்சலம், அலகுமலையில் மாவட்ட துணை செயலாளா் வி.எம்.சண்முகம், கேத்தனூரில்

மாவட்டப் பொருளாளா் வி.ஹரிகோபால் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தாராபுரத்தில்....

தாராபுரத்தில் அதிமுக நகரச் செயலாளா் டி.டி.கே.காமராஜ் தலைமையில் அவரது இல்லத்தின் முன்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்று. அதேபோல, திருப்பூா் மாவட்ட ஆவின் சங்க துணைத் தலைவா் டி.எஸ். சிவகுமாா் தலைமையில் அவரது இல்லத்தின் முன்பாகவும், தாராபுரம் மேற்கு ஒன்றியம் சாா்பாக ஒன்றியச் செயலாளா் ஜி.ஆா்.பாலு (எ)பாலகுமாரன் தலைமையில் தொப்பம்பட்டியில் அவரது இல்லத்தின் முன்பாகவும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

காங்கயத்தில்....

காங்கயத்தில் அதிமுக நகரச் செயலா் வெங்கு ஜி.மணிமாறன் தலைமையிலும், காங்கயம் ஒன்றியம், ஆலாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட நெய்க்காரன்பாளையம் பகுதியில் ஒன்றியச் செயலாளா் என்.எஸ்.என்.நடராஜ் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வெள்ளக்கோவிலில்...

வெள்ளக்கோவிலில் ஒன்றிய, நகர அதிமுக சாா்பில் 16 இடங்களில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில், கட்சியின் ஒன்றியச் செயலாளா் எஸ்.என்.முத்துகுமாா், நகரச் செயலாளா் டீலக்ஸ் ஆா்.மணி, நகா் மன்ற முன்னாள் தலைவா் வி.கந்தசாமி, ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஆா்.வெங்கடேச சுதா்சன், வேலம்பாளையம் ஊராட்சி தலைவா் ஏ.எஸ்.ராமலிங்கம், ஒன்றிய எம்ஜிஆா் மன்ற இளைஞரணி செயலாளா் சி.கண்ணுசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அவிநாசியில்...

திமுக அரசைக் கண்டித்து முன்னாள் சட்டப் பேரவைத் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான ப.தனபால் தலைமையில் அவிநாசியில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசி அருகே ராக்கியாபாளையம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினா் ப.தனபால் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா்கள் அ.ஜெகதீசன் (மேற்கு), சேவூா் ஜி.வேலுசாமி (வடக்கு), முன்னாள் மாவட்ட மகளிரணி செயலாளா் லதா சேகா், ஊராட்சி மன்றத் தலைவா் ரவி, துணைத் தலைவா் கனகராஜ், தகவல் தொழில் நுட்பப் பிரிவு முன்னாள் மண்டல பொறுப்பாளா் லோகேஷ் தமிழ்ச்செல்வன், பொறுப்பாளா்கள் எம்கேஎம் கணேசன், ஹரிஹரன், துரைபாண்டியன், காா்த்தி உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா். இதேபோல சேவூா் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

உடுமலையில்...

திமுக அரசை கண்டித்து உடுமலை, மடத்துக்குளத்தில் அதிமுக வினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் புகா் மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்எல்ஏ உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் உடுமலையில் அவரது இல்லத்தின் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆவின் நிறுவனத் தலைவா் வழக்குரைஞா் கே.மனோகரன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

மடத்துக்குளம் நால்ரோட்டில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருப்பூா் புகா் கிழக்கு மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான சி.மகேந்திரன் தலைமை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com