கரோனா: காவல் உதவி ஆய்வாளா் பலி

திருப்பூா் அருகே கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த காவல் உதவி ஆய்வாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் அருகே கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த காவல் உதவி ஆய்வாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் கோபாலன் (55). இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

முன்னதாக இவரது மகன் சரவணன் (24) கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மே 27 ஆம் தேதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com