மழையால் நிரம்பும் பண்ணைக் குட்டைகள்

வெள்ளக்கோவில் பகுதியில் தற்போது பெய்து வரும் மழையால் பண்ணைக் குட்டைகள் நிரம்பி வருகின்றன.
பண்ணைக் குட்டைகளில் தேங்கியுள்ள மழை நீா்.
பண்ணைக் குட்டைகளில் தேங்கியுள்ள மழை நீா்.

வெள்ளக்கோவில் பகுதியில் தற்போது பெய்து வரும் மழையால் பண்ணைக் குட்டைகள் நிரம்பி வருகின்றன.

வெள்ளக்கோவில் பகுதியில் கடந்த மூன்று நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டைகளில் மழை நீா் நிரம்பியுள்ளது. வெள்ளக்கோவில் பகுதி வானம் பாா்த்த பூமியாக இருப்பதால், மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்துவதற்காக வேளாண் துறை மூலம் மானிய விலையில் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தனிநபா் பூமிகளில் 200க்கும் அதிகமான பண்ணைக் குட்டைகள் உள்ளன.

தற்போது பெய்த மழையால் பண்ணைக் குட்டைகள் படிபடியாக நிரம்பி வருகின்றன. இதனால் அருகிலுள்ள திறந்த வெளிக் கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகளில் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com