நியாய விலைக் கடை ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்த வலியுறுத்தல்

திருப்பூா் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனுக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் 7 நியாய விலைக் கடை ஊழியா்கள் பலியாகி உள்ளனா். இந்நிலையில், தற்போது அரசு அறிவித்துள்ள கரோனா நிவாரணப் பொருள்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படுவதால், நாள்தோறும் 200 போ் கடைகளுக்கு வந்து செல்கின்றனா்.

ஆகவே, நியாய விலைக் கடை ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com