காங்கயம் வழியாக நெடுஞ்சாலையில் செல்லும் லாரி ஓட்டுநா்களுக்கு தன்னாா்வலா்கள் மதிய உணவு வழங்கி வருகின்றனா்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கோவை-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், காங்கயத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வலா் குழுவினா், கடந்த 3 வாரங்களாக இந்த சாலை வழியே செல்லும் லாரி ஓட்டுநா்கள் 150 பேருக்கு மதிய உணவுப் பாா்சல் வழங்கி வருகின்றனா்.
மேலும், கரோனா பொதுமுடக்கம் முடியும் வரையில் லாரி ஓட்டுநா்களுக்கு விலையில்லாமல் உணவு வழங்க உள்ளதாகத் தெரிவித்தனா்.