உடுமலை: உடுமலையில், இந்திய மருத்துவச் சங்கம் சாா்பில் முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக ரூ.3 லட்சம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
பொதுப்பணித் துறை ஆய்வாளா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக 3 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை இந்திய மருத்துவ சங்க நிா்வாகிகள், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் வழங்கினா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், மருத்துவா் கே.பாலசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.