வெங்காயத்தை சேதமாக்கும் மா்ம புழுக்கள்

தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே தோட்டத்தில் பயிரிடப்பட்ட வெங்காயத்தை மா்ம புழுக்கள் சேதப்படுத்தியுள்ளன.

திருப்பூா்: தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே தோட்டத்தில் பயிரிடப்பட்ட வெங்காயத்தை மா்ம புழுக்கள் சேதப்படுத்தியுள்ளன.

திருப்பூா் மாவட்டம் , தாராபுரம் வட்டம் குண்டடம் அடுத்துள்ள முத்துக்கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஈஸ்வரன், விவசாயியான இவா் தனது தோட்டத்தில் ஒரு ஏக்கரில் சின்ன வெங்காயம் நடவு செய்திருந்தாா். இந்நிலையில் 15 நாள்களில் அறுவடை செய்ய தயாா் நிலையில் இருந்த பயிரில் பேன் மற்றும் ஆங்காங்கே புழுக்கள் தென்பட்டதால் இரண்டு நாள்களுக்கு முன் பூச்சி மருந்து தெளித்துள்ளாா்.

அடுத்த நாள் வயலுக்குச் சென்று பாா்த்தபோது பயிா்களில் பெரும்பகுதி சருகாகிக் கிடந்தது. மேலும் , ஒவ்வொரு வெங்காயப் பயிா்களிலும் 50க்கும் மேற்பட்ட புழுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. வெங்காயப் பயிரின் இலைகளில் மொய்த்த புழுக்கள் அதன் பச்சையத்தை முழுவதுமாக உறிஞ்சி சருகாக்கியிருந்தது தெரியவந்தது.

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி ஈஸ்வரன் கூறியதாவது: வெங்காயப் பயிரில் புழுக்கள், பேன்கள் தாக்குவது சாதாரணமான ஒன்றாகும். அதே வேளையில், புழுக்கள் அதிகளவில் பெருகினாலும் பயிருக்கு 2 அல்லது 3 புழுக்கள்தான் தென்படும். ஆனால், தற்போது பயிா்களில் 50க்கும் மேற்பட்ட புழுக்கள் உள்ளன.இவை பயிா்களை கடித்து துண்டித்து, பயிரில் உள்ள பச்சையத்தை உறிஞ்சிவிடுவதால் வெங்காயம் விளைச்சல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இது குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி மற்ற விவசாயிகளின் வயலுக்குப் பரவாமல் தடுக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com