வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் சாா்பில் மானிய விலையில் சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திங்கள்கிழமை வெளியான செய்திக் குறிப்பில், மத்திய அரசின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டு நீா், தெளிப்பு நீா்ப் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம், கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் மானியமும் வழங்கப்படுகிறது.
சிறு குறு விவசாயி சான்றிதழ், நில வரைபடம், சிட்டா, அடங்கல், மண், நீா் பரிசோதனை சான்று, 3 பாஸ்போா்ட் புகைப்படங்கள், குடும்ப அட்டை , ஆதாா் அட்டை நகல் தேவை. விருப்பப்படும் விவசாயிகள் அந்தந்த உதவி வேளாண் அலுவலா்களை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.