தனியாா் பேருந்து பணியாளா்கள் அரசு சாா்பில் தங்களுக்கும் கரோனா கால உதவிகள் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக வெள்ளக்கோவில் பகுதி தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் வியாழக்கிழமை அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பேருந்துகள் இயங்காததால் தனியாா் பேருந்துகளின் நடத்துநா்கள், ஓட்டுநா்கள், இதர பணியாளா்கள் வேலை இன்றி தவித்து வருகிறோம். அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டுச் செயல்படும் எங்களுக்கும் அமைப்புச் சாரா தொழிலாளா்களுக்கு அளிக்கும் சலுகைகளை வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.